×

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் ஒரே பைக்கில் சென்ற 3 இளைஞர்கள் சாலை விபத்தில் சிக்கி பரிதாப உயிரிழப்பு..!!

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் ஒரே பைக்கில் சென்ற 3 பேர் சாலை விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பகுதியில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த முகமது ஷகில், ஆகாஷ், ஹரி ஆகிய 3 இளைஞர்கள் நேற்று நாகப்பட்டினத்தில் நடந்த அவர்கள் உறவினர் இல்ல திருமண விழாவில் கலந்துகொண்டு அங்கிருந்து இன்று காலை திரும்பியுள்ளார்கள். கேடிஎம் ரேஸ் பைக்கில் இளைஞர்கள் 3 பேரும் அதிவேகமாக சென்றுள்ளனர். தரங்கம்பாடி அருகே ஒரு கிலோ மீட்டர் தொலைவில் வரும் போது சாலையில் ஸ்ரீதர் என்பவர் ஓட்டி சென்ற ஸ்கூட்டர் மீது எதிர்பாராத விதமாக இளைஞர்கள் ஓட்டிவந்த கேடிஎம் பைக் மோதியுள்ளது.

இந்த விபத்தில் 3 இளைஞர்களும் நிலைதடுமாறி கீழே விழுந்தபோது, அந்த வழியாக வந்த டிராக்டரில் தலை நசுங்கி 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து விபத்தில் படுகாயமடைந்த ஸ்ரீதர், மயிலாடுதுறை அரசினர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிரிழந்த 3 இளைஞர்களின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதிவேகமாக வந்த இளைஞர்கள் எதிர்பாராத விதமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் ஒரே பைக்கில் சென்ற 3 இளைஞர்கள் சாலை விபத்தில் சிக்கி பரிதாப உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Mayiladuthurai District ,Tarangambadi ,Mayiladuthurai ,Tharangambadi ,Muhammad Shakil ,Akash ,Hari ,Cuddalore district ,Nagapattinam ,
× RELATED மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில்...